
இந்த துக்கம் கூட
எனக்கு இனிக்கிறது, ஏனெனில்
இது உன்னால் வந்ததால்.
பென்சிலால் கிறுக்கப்பட்ட கவிதை.
இரவு 11.45. July 17, 2004
நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.

".......காதல் ஒரு போதும் மிருக உணர்ச்சி அல்ல. காதல் மனித பண்பை உயர்த்துவதாகவே அமைகிறது. அது காதலர்களை என்றும் கீழ்நிலைக்குத் தள்ளுவதில்லை. உண்மையான காதலை யாரும் உருவாக்க முடியாது. அது எப்போது என்றும் கூற முடியாது. ஏனெனில் அது இயற்கையானது. ஒரு வாலிப ஆணும், வாலிப பெண்ணும் தங்கள் உணர்ச்சிகளை இரையாகமல் தங்களின் தூய்மையை பாதுகாத்துக்கொண்டே ஒருவரையொருவர் காதலிக்க முடியும்........"



