Tuesday, September 30, 2008

என்ன நியாயம்?

இலவம் பஞ்சுகளை
எரிக்க


எரிமலை தீப்பிழம்பா?
என்ன நியாயம்.


இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்து. 85 குழந்தைகள் பலி.
அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
July 16, 2004. 12:15 pm.

எனவே வேண்டாம் உனக்கு....



என் பூவுக்கு, ஊசி போட்ட மருத்துவன் யார்?


இதோ ஒரு இதழ், ஊசி துளையினால் கண்ணீர் சிந்துகிறது.


இப்போது என்ன செய்ய?


எனவே வேண்டாம் உனக்கு, இனியெப்போதும் அந்த..............

அவளுக்கு உடம்பு சரியில்லையென்று தன் தந்தையுடன் மருத்துவமனைக்கு சென்று வந்தாள். Jan 06, 2003

Monday, September 29, 2008

காதலை பற்றி மாவீரன் பகத்சிங்..

".......காதல் ஒரு போதும் மிருக உணர்ச்சி அல்ல. காதல் மனித பண்பை உயர்த்துவதாகவே அமைகிறது. அது காதலர்களை என்றும் கீழ்நிலைக்குத் தள்ளுவதில்லை. உண்மையான காதலை யாரும் உருவாக்க முடியாது. அது எப்போது என்றும் கூற முடியாது. ஏனெனில் அது இயற்கையானது. ஒரு வாலிப ஆணும், வாலிப பெண்ணும் தங்கள் உணர்ச்சிகளை இரையாகமல் தங்களின் தூய்மையை பாதுகாத்துக்கொண்டே ஒருவரையொருவர் காதலிக்க முடியும்........"

------மாவீரன் பகத்சிங் தனது நண்பர் சுக்தேவ்க்கு எழுதிய கடைசி கடிதத்தில் இருந்து.

Monday, September 8, 2008

காதல் தேர்வு


வார்த்தைகளுக்கு பூஜ்யம் மார்க்.


உன் விழிகள் மட்டும் சதம் அடித்தது


நான் எழுதிய காதல் தேர்வில்.


ஜனவரி 04, 2003

மொழிகள்


உலகில் உள்ள மொழிகள் எத்தனை.

து ஒரு கேள்வி.

மன்னிக்கவும், இது கணக்கிலடங்கா

ஒவ்வொரு காதலர்களின் விழிகள்

பேசுவதும் ஒரு வித மொழியே.




ஜனவரி 02, 2003

பிரிவு


நிகழ்வுகளின் துவக்கமாய்

மௌனம்.

என் மரணத்தின் துவக்கமாய்

உன் பிரிவு.

ஏப்ரல் 13, 2003

உன்னையும் சேர்த்து...

இந்த பூமிக்கு நிலவு

ஒன்றல்ல


உன்னையும் சேர்த்து இரண்டு.



--ஜனவரி 02, 2003

Saturday, September 6, 2008

சோகம்


உன்னில் இருந்து உதிர்ந்ததால்

ரத்தம் சிந்தியே

சிவப்பாகி போனதோ

இந்த இதழ்கள்?


ஏப்ரல் 01, 2004.

மற்ற தேதியெல்லாம்....


நீ பூபெய்தியத்தை

இந்த உலகுக்கு அறிவித்த நாள்.

மற்ற தேதியெல்லாம்

பொறாமை கொண்டது

மார்ச்  மூன்றாம் நாளை பார்த்து.


மார்ச் 03, 2004. இன்றோடு எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறாள்.

பேனாவிடம் ஒரு கேள்வி



உன்னை பற்றி வெகு நாட்களாக கவிதைகள்

எழுத முடிவதில்லை. ஏனென்றே தெரியவில்லை.

காரணம் கேட்டேன் என் பேனாவிடம்.

"கவிதையை,
கவிதையாய் வடிக்க முடியாதென்றது".


02 சனவரி , 2005


Friday, September 5, 2008

வர்ணித்து காட்டுங்கள்


அவளை

மலரென்று வர்ணிப்பதா

வேண்டாம்

அவை வாடிவிடும்.


கொடியென்று வர்ணிப்பதா

வேண்டாம்

அவை ஒடிந்து விடும்.


கனியென்று வர்ணிப்பதா
வேண்டாம்

அவை கனிந்து விடும்.


நிலவென்று வர்ணிப்பதா

வேண்டாம்

அது தேய்ந்து, தோன்றும்.


மொழியென்று வர்ணிப்பதா

வேண்டாம்

அவை வழக்கொழிந்து விடும்.


ஓவியம் என்றால்

வேண்டாம்

அதற்கும் ஒரு விலையுண்டு.


எனவே, உலகிலுள்ள கவிஞர்களுக்கு

ஒரு வேண்டுகோள். எங்கே, என்னவளை

வர்ணித்து காட்டுங்கள் என்று....


06, December 2002


தவிப்பு


நீ அதிருப்தியாய் நடந்து கொள்ளும்

அந்த ஒரு நொடி கூட

நான் அமிலம் குடித்தவன் போல்

உணர்கிறேன்.


06, December 2002

Thursday, September 4, 2008

காதலித்து பார்


காதலித்து பார்..
தாயின் கட்டளை மீறி
ரேஷன் கடை வரிசையில் நிற்பதை மறுத்து
கால் கடுக்க வெகுநேரம் காத்திருப்பாய்
காதலிக்காக.
காதலித்து பார்..வலி தெரியாது.




உயிரினங்கள் உன்னதமானவைகளாக
தோன்றும்
காதலித்து பார்..


காலத்தின் அவசியம் உணர்வாய்
காதலித்து பார்..
காஷ்மீர் கூட குளிராது
காதலி பக்கம் இருந்தால்
காதலித்து பார்..

உனக்கு பிடித்தவைகள் கூட
உனக்கு தெரியாது, ஆனால்
அவள் ரசனைகள் உன் விரல் நுனியில்.
காதலித்து பார்..

மருத்துவம் படிக்காமேலேயே
வைத்தியம் பார்ப்பாய்
காதலிக்காக.
காதலித்து பார்..

உணர்வுகளில் உயர்ந்தது காதல்
ஒரு முறையேனும்
காதலித்து பார்..

வெறும் மண்தான்
அவள் நடந்து சென்றதால், அந்த
பாதசுவடுகளில் அவள் முகம் தேடுவாய்
காதலித்து பார்..

பஞ்சு விரல்களில்
பதித்த கோலங்களை தொடும்போது
அவளை தொட்ட ஸ்பரிசம் உணர்வாய்
காதலித்து பார்..


உலகிலேயே அவள்தான் அழகி என்பாய்
ஆனால், நீ வசிக்கும் தெரு பற்றி கூட
உனக்கு தெரியாது
காதலித்து பார்..

அவளை நிலவென்பாய்
மலரென்பாய்
மொழியென்பாய்.
அவளை
பார்க்காத நாட்களில்
பேசாத பொழுதுகளில்
உன் பூமியை,
வேற்று கிரகம் என நினைப்பாய்
காதலித்து பார்..

கற்பனை பெருகும்
நீயும் கவிஞனாவாய்
கையெழுத்து அழகாகும்.
அயன் பண்ணாமல்
ஆடை அணியமாட்டாய்.
முகம் பார்க்கும் கண்ணாடி
உன்னை கண்ட படி திட்டும்
போதுமடா என்று.
காதலித்து பார்..


நான்கு சுவர்களுக்குள் ஆயிரம் பேர்
இருப்பதாய் உணர்வாய்.
நீ இறந்த பின்
உன் கல்லறையின் செங்கல் கூட
அவள் பெயர் சொல்லும்
காதலித்து பார்..


என்னை அதிகம் பாதித்த, கவிரசு வைரமுத்துவின் "காதலித்துபார் ..."
படித்ததில், என்னுள் உதித்த கவிதைகள்.
November 2002






எல்லைகள்


நான் எல்லைகளை மட்டுமே

உன்னிடம் பார்க்க விரும்புகிறேன்,

அது பாசமோ, கோபமோ

காட்டிவிடு எல்லைகளை.

அதற்கான பாதைகளை அல்ல.

இடம் சேராத பாதையில்

பயணம் செய்து என் முயர்ச்சி

வீணாகாமல் இருக்குமல்லவா?

ஜாக்கிரதை



"உன்னை கடந்து செல்லும்


காற்றை கூட எச்சரிப்பேன்


ஜாக்கிரதை அவள் என்னவள்


என்று".

************************************

"காற்றில் கலந்திருக்கும்
அணுக்கள் கூட உன்னருகில் வர
என் அனுமதி தேவை.
இல்லையேல், அணுக்களையும்
கைது செய்து சிறையிலடைப்பேன்"



அவளுக்கு கொடுத்த கடிதத்திலிருந்து

November 2002,

நீ இல்லாதபோது..


இரவுகள் தனிமையாய்

இமைகள் ஈரமாய்

இருளாக தெரிகிறது என்

பகல் பொழுதுகள்

நீ என்னுடன் இல்லாதபோது.



October 13, 2002

மேலல்லவா?


காந்தி பிறந்த நன்னாளில்

என் காதலியை கவிதைகளால்

நினைவு கூறுகிறேன்.


என்னை புரிந்து கொள்,
உன் ஒரு நிமிட இழப்பு

என்னை அதிகமாய் பாதிக்க செய்கிறது.

அடிக்கடி, இதனாலேயே பிரிந்து விட

நினைக்கிறேன்.


மெல்லச்சாவதை விட,

ஒரேடியாய் இறப்பது மேலல்லவா?



October 02, 2002

Wednesday, September 3, 2008

அழியாது


போலி உவமைகளால்,

பொய்யான புகழ்ச்சிகள்

வளர்ததல்ல நம் காதல்.

முரண்பாடுகள் வளர்த்தெடுத்த
ஆலமரம் இது,
என்றும் அழியாது.

கரடுமுரடான பாதை
என்றும் வழுக்காது.

நம் காதலும் (வாழ்வும்) அப்படித்தான் போலும்.

பிரசவம்


சூரிய பிரசவம் இந்த பிரபஞ்சம் .

நம் நெருங்கிய நட்பு பிரசவம்


நம் காதல்.


அவளுக்கு கொடுத்த கடிதத்திலிருந்து..
October 2001.

வேண்டுகோள்


பூமிப்பந்துக்கு ஒரு வேண்டுகோள்.

நான் அவளை சந்தித்து பேசும் போது..

மெதுவாக சுழலச்சொல்லி...


அவளுக்கு கொடுத்த கடிதத்திலிருந்து..

October 2001.

உன் நினைவுகள்..


இமைக்க மறந்த நிமிடங்கள்

உண்டு. ஆனால்

உன்னை நினைக்க மறந்த

நாட்கள் இல்லை.

ஒரு 24 மணிநேரத்தில்

தூக்கத்தில் உன் நினைவில்லாமல் சில நாள்.

எனினும், சில நேரங்களில் கனவுகளாய்

தொந்தரவு செய்கிறாய்..

சில நேரங்களில் நினைவுகளாய்

தூக்கம் கெடுக்கிறாய்.

காலையில் விழித்தவுடன் நான் யார் என்பதை

உன் நினைவுகள்தான் எனக்கு ஞாபகப்படுத்தும்.

இதுவே என் ஒரு நாளின்

உன்னைப்பற்றிய நினைவுகள்.
அவளுக்கு கொடுத்த கடிதத்திலிருந்து..
October 2001.

பிறந்தநாள்


பூமி பந்துக்கு

புத்தாடை அணிவி.

சூரியனுக்கு

ஒரு நாள் விடுமுறை விடச்சொல்

இன்று என்னவள் பிறந்தநாள்.

அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு கொடுத்த கடிதத்தில்..
02, November 2001

உடல் மட்டுமே..


அவள் பார்வை மொழி

என் விழிகளுக்கு மட்டுமே புலப்படும்.

நடை, உடை, பாவம்

என் ரசனைகள்.

அவள் சுவாசம்

என் வசிப்பிடம்.

அவள் இல்லாத நான்

எலும்புகளும், சதையும் கொண்ட

ஒரு உடல் மட்டுமே.

பூ ஒன்று..


பூ ஒன்று பேசியது என்னிடம்

அவளைப்பற்றி.

சில கேள்விகள் தொடுத்தது.

மென்மையை தன்னிடம் இருந்து

பறித்ததாக குற்றம்

வாசம் இவள் கூந்தலுக்கு இடம்

மாறியதாக குற்றம்,

வாடாமல் இருக்கும் ரகசியம் என்ன என்றும்?

ஒ! நீ காதலிப்பதால் தானோ

அவள் இன்னும் வாடவில்லை

என்று தானே கேள்வி கேட்டுக்கொண்டு ..

குழப்பத்துடன்...உறங்க சென்றது.

பூ ஒன்று பேசியது என்னிடம்
அவளைப்பற்றி.

விஷம்


உனை மறப்பது

கசப்பான மருந்து.

உனை நினைப்பது

இனிப்பான விஷம்.

நீதான்..


உலகில் மிகவும் அழகானதும்

எனக்கு பிடித்த பொருளும்

நீதான்.

Tuesday, September 2, 2008

துயரம்.


அழியாத
மனித சாதனைகள்
மனித உழைப்புகள்
அழிக்க முடியா ரணங்கலாகிவிட்டன.  


செயற்கை இதயமும்
துடித்திருக்கும் இந்த கொடுர செயலைக்கண்டு.



மனிதத்தின் கடைசி மிச்சம்.
அசிங்கத்தின் கடைசி எல்லை.
கொடுரத்தின் கொடுரமான செயல்.
நடந்தவையாக இருக்கட்டும்
நிகழ்வுகளாக வேண்டாம்.


செப்டம்பர் 11,2001. உலக துக்க தினம்.
உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்டு முதலாம் ஆண்டு நினைவு நாளில்
எழுதப்பட்டது.
செப்டம்பர் 11, 2002.



சம்சாரமே..


"எழில்"
எனும் மனித இயந்திரத்தை
இயக்கி கொண்டிருக்கும்
மின்சாரமே.
என் வருங்கால சம்சாரமே.

உன்னையல்ல..


உன் உயிரை நேசிக்கிறேன்

உன்னையல்ல.

உன் உயிர், கூடு பிரிந்தாலும்

தேடி தேடி

நேசிப்பேன்

நானும் என் கூடு பிரிந்து.


August 05, 2002

.

விழிகள்..

பல நூறு காந்தங்களின்
வல்லமை படைத்தது
உன் இரு விழிகள்.
***************
விழிகளல்ல அவை
பள்ளிக்கூடங்கள்.
எனக்கு ஒவ்வொரு நாளும்
ஆயிரம் பாடம் சொல்லித்தருகிறது.
***************
X-ரே கதிர்களா
உன் விழிகள் ?
சதைகள் தாங்கிய என் எலும்பு கூடு
தாண்டி
என் இதயத்தை துளைக்கிறது.

இந்த இரு விழிகளும் எனக்கு சொந்தமானவை.

காதல் செய்வேன்


எனை

கண்டங்கள் விட்டு

கடத்தினாலும் உனை

காதல் செய்வேன் ,

கல்யாணம் செய்ய.

படைப்பு


பாரதியும், ஷெல்லியும்

இன்றில்லை.

இருந்திருந்தால், உனை

ஒரு காவியமாக படைத்திருப்பார்கள்.

எப்போது?


என் மனக்குகையில்

கண்டெடுத்த கருப்பு தங்கமே

உனை என் உடலில்

சூடுவது எப்போது?

மறந்து..

நான்
உணவு மறந்து

உறக்கம் மறந்து

உலகம் மறந்து

என்னையே மறந்து

உன்னை ரசித்துக்கொண்டே
இருக்க வேண்டும்..