நாங்கள் என்ன பெட்ரோல் விற்றோமா?
இல்லை எண்ணெய் கிணறுகள் தான்
எங்களுக்கு சொந்தமா?
பின்பு நீங்கள் மட்டும்
கறிவேப்பில்லை முதல்
காய்கறி வரை,
அரிசி முதல்
அல்வா வரை,
பாலிலிருந்து
பண்டம் வரை,
இன்னும் எத்தனையோ ...
விற்பது நியாயமா?
எங்களை போன்ற ஏழைகள்
உள்ளே நுழைய முடியாதபடி..
வண்ணமிட்ட விளக்குகளில்
உங்கள் முகம் பிரகாசிக்கலாம்.
ஆனால், எங்கள் வயிறு பசியால் இன்னும்
எரிந்து கொண்டுதான் இருக்கிறது.
இது, உங்களை சுடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
October 02,2008

No comments:
Post a Comment