
விண்ணுக்கு சுற்றுலா சென்று வருகிறான் இன்றைய மனிதன்.
பிரபஞ்சத்தையே ஆய்வு கூடத்தில் அடக்கி விடுகிறான்.
மனிதனையே இன்னொரு நகல் செய்கிறான்.
மூளையும் நரம்பு மண்டலமும் இல்லாத மனிதனையே (ரோபோ) உருவாக்குகிறான் மனிதன்
மனித மூளைக்கு அப்பாற்பட்டவைகளை
இன்னும்... என்னனோவோ செய்கிறான்
ஆனால் பெண்ணின் மனம் புரியாமல் இன்னும்
சோக கவிதைகளில் காலம் கடத்துகிறான்...
ஒ! அறிவியலுக்கு அப்பாற்பட்டவையோ காதல் ?
No comments:
Post a Comment